Showing posts with label இயலாமை. Show all posts
Showing posts with label இயலாமை. Show all posts

Saturday, October 24, 2009

சுவர் சித்திரங்கள்

எனது வீட்டின் சுவற்றில் வெவ்வேறு சித்திரங்களை மாட்டினேன். முன்பொரு நாளில் பாதகங்களை நிறுத்தச் சொன்னேன், பின்னொரு நாளில் சகோதரனுக்கு அஞ்சலியென்றேன், பின்னர் குன்றின் மேலேறி உலகுக்கான அறைகூவல் விடுக்குமொரு சித்திரம் மாட்டினேன். பின்னர், அமைதியாக கீழிறங்கி உறவுகளுக்கான கண்ணீர் அஞ்சலி அட்டை வைத்தேன், முள்கம்பி பற்றியதொரு புதிய சித்திரத்தை எங்கே மாட்டுவது என்று யோசிக்கிறேன்.

எப்போதும், இப்போதும் முட்கம்பிகளுக்குப் பின்னாலிருந்து ஒரு குழந்தை வெறித்துக் கொண்டேயிருக்கிறது, "அடுத்தது என்ன வைப்பான் என்று???"....