ம்ம்... மற்றுமொரு ஆண்டு நிறைவடைந்து விட்டது.. நாளை மற்றுமொரு நாளாகவே இருந்தாலும், கொண்டாட்டங்களும், வாழ்த்துக்களும் புதிய சட்டையின் வாசத்தினைப் போல சுழ்ந்து கொண்டிருக்கின்றன. இனி புதிய நாட்காட்டி, புதிய டைரி.. என புதியவை சூழ்ந்த வாசத்துடன் ஒரு வாரம் செல்லும்.
2009 ஐத் திரும்பி பார்த்தால்..தனிப்பட்ட வாழ்க்கையின் சுக துக்கங்களைத் தவிர்த்து, சமூக வாழ்வில் வெறுமையும் ஆற்றாமையும்தான் விஞ்சி நிற்கிறது. கடந்து சென்ற 2009 தமிழர்கள் நவீன கால ஆதிவாசிகளே என்பதைப் பல நிகழ்வுகளில் அழுத்தமாய்ப் பதிந்துவிட்டுச் சென்றிருக்கிறது. போன்றோரைக் குறிக்கும் குறியீடாய் ஆற்றாமையைத், தீ உண்ண; துவங்கியது 2009. என்ன நேர்ந்தாலும் தனது மீளாத் துயிலிலிருந்து எழுவதில்லை என்று உறுதி பூண்டு நகர்ந்துகொண்டும் நகர்த்தப் பட்டுக்கொண்டுமிருக்கிறது தமிழ்ச் சமூகம்.
எனது வரவேற்பறையின் அலங்கார விளக்குகளும், சன்னலின் கண்ணாடிகளும் மெருகேறிக் கொண்டேயிருந்தாலும், உயிர்ப்பின் நிழல் தேடி அலைவதிலேயே கழிந்தது 2009 .
நாளை 2010..
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்... :)
Showing posts with label 2010. Show all posts
Showing posts with label 2010. Show all posts
Thursday, December 31, 2009
Subscribe to:
Posts (Atom)