Thursday, November 15, 2012

கிரகங்களின் ஒன்றினைவு

இன்றைக்கு தமிழ்மணத்தின் முகப்பில் சாதிமறுப்புத் திருமணம் குறித்த ஒரு அறிவிப்புடன் ஒரு இடுகை இருந்தது..

அதன் சுட்டி இங்கே..

http://www.periyarthalam.com/2012/11/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4/


உள்ளே நுழைந்தவுடன் அவர்களது விளம்பரப் பலகையில் ஒளிர்ந்தது மற்றுமொரு இணைய தள விளம்பரம் அது சுயமாக வெளித்தெரியும் விளம்பரம்தான்.. இருந்தாலும் நகைச்சுவைக்காக இங்கே பதிகிறேன்.




சாதியத்தை ஒழிக்க நினைக்கும் ஒரு அறிவிப்பில் சாதியத்தைத் தாங்கிப்பிடிக்க பெரிதும் துணைபோகும் ஒரு தளத்தின் விளம்பரத்துடன் பார்த்ததும் பதிவிடத் தோன்றியது..


Monday, November 5, 2012

I-T ACT SECTION 66 A- பதிவர்கள் ஒன்று படுவோம்

கருத்து சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் பொருட்டு நமது தருமி சாரின் முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இவ்விடுகை.
========================================================
*



 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 

Monday, October 22, 2012

பரிணாமம் - டார்வின் - இன்னபிற - பகிர்வு

இன்றைக்கு நண்பர் ஒருவர் முகப்புத்தகத்தில் இக்கட்டுரையின் சுட்டியை பகிர்ந்திருந்தார்..

 ஓரிரு வரிகளுடன் அச்சுட்டியை இங்கே தருகிறேன்.

//Recently, the Karnataka government gave a lot of money to temples to appease the rain gods//

//And, yet, the fraction of people who are educated enough to understand science is minuscule//

//But educating them is not enough. We have to inculcate a proper scientific temper in them, help them use science and technology to rise out of their misery. Instead of spending thousands of crores on building nuclear weapons, the government should spend the money on primary education.//

////Einstein, arguably the greatest scientist in human history and my personal hero, termed belief in God “childish superstition.”//

முழுக்கட்டுரையும் கீழுள்ள சுட்டியில்..


Let’s ignore science at our peril -


http://www.thehindu.com/opinion/open-page/lets-ignore-science-at-our-peril/article4017252.ece


மற்றுமொருமுறை சங்கு ஊதப்பட்டிருக்கிறது.. காதுள்ளவரகளுக்கு கேட்கட்டும் என்ற " நம்பிக்கையில்".. :)

ஒருவேளை ஹிந்து நாளிதழைப் புறக்கணிப்போம் என்று பிரச்சாரம் தொடங்குமோ..