Showing posts with label செய்தி. Show all posts
Showing posts with label செய்தி. Show all posts

Friday, May 21, 2010

மீண்டும் ஜுபீடர்

சென்ற ஆண்டில் ஜூலை மாதத்தில் நடந்த இந்த 19 ஜூலை 2009 ஜுபீடரில் நடந்தது என்ன??? அதிசயத்தைத் தொடர்ந்து மீண்டும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது ஜூபீடர்.

தற்போது ஜூபீடரின் தென்பகுதியில் இருந்த மேகப் பட்டைகளில் இரண்டு முழுவதுமாக காணாமல் போயுள்ளது. இது மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வு என நாசாவின் விஞ்ஞானிகளுள் ஒருவரான Glenn Orton தெரிவித்திருக்கிறார்.
கீழே நாசா வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் என்ன நிகழ்ந்தது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.




புகைப்பட மூலம்: http://science.nasa.gov/media/medialibrary/2010/05/19/loststripe_strip.jpg

சென்ற முறை 19 ஜூலை 2009 ல் ஜூபிடரின் நிகழ்ந்த மர்மமான மோதலைக் கண்டறிந்து சொன்ன Anthony Wesley யே இந்த முறையும் இதை அவதானித்ததில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். மேலும், "ஜூபீடர் தொடர்ந்து ஆச்சர்யப்படுத்துகிறது, ஜூபீடரை ஆய்வு செய்வது கண்டிப்பாக பல புதிய செய்திகளைத் தரும் என்றும், ஜுபீடரைப் பற்றிய நமது புரிதல் மிகவும் துவக்க நிலையிலேயே இருக்கிறது" என்றும் குறிப்பிடுகிறார்.

ஆனால், இந்த மேகப்பட்டையின் நிறச்செறிவானது 1973-75, 1989-90, 1993, 2007, 2010, ஆகிய ஆண்டு காலங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேய்ந்தும் மறைந்தும் வந்திருக்கிறது. 2007 ஆம் ஆண்டு இத்தேய்மானம் உடனடியாக நின்று அம்மேகப்பட்டை முழுவதுமாகத் தோன்றியதாகவும், மற்றைய ஆண்டுகாலங்களில் தற்போதிருப்பது போல அச்செந்நிறப்பட்டை முழுவதுமாக மறைந்திருந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

பூமியில் நீர்மூலக்கூறின் பரவல் வெந்நிறமேகமாகத் தோன்றுவதுபோல ஜுபீடரில் அமோனியா (NH3) மூலக்கூறுகளினால் தோன்றும் மேகங்கள் உண்டு.

இவ்வெண்மை நிறத்திற்கான காரணமாக அமோனியாவின் நுண்படிகங்கள் மேகத்தினும் விரவியிருப்பதுவே காரணமாகயிருக்கலாம் என்றும், இவ்வமோனியாப் படிகங்களின் பரவல் குறைந்து மீண்டும் செந்நிறப்பட்டை தீடிரென தோன்றலாம் என்றும் அனுமானித்திருக்கின்றனர். இப்படிக் குறிப்பிட்ட கால இடைவெளியில் அமோனியா மேகங்கள் கிளம்ப்புவதற்கான காரணங்கள் குறித்து சில அனுமானங்களே முன்மொழியப்பட்டுள்ளன, உறுதியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றும் குறிப்பிடுகின்றனர்.

தகவல் மூலம்: http://science.nasa.gov/science-news/science-at-nasa/2010/20may_loststripe/

இப்படியான நவீன வானியல் கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களை வாரம் ஒரு முறை உங்கள் மின்னஞ்சலில் பெறுவதற்கு நீங்கள் இந்தப் பக்கத்தில் இலவசமாக பதியவைத்துக் கொள்ளலாம். http://science.nasa.gov/about-us/email-updates/



************************************************************************************

ஒருவேளை பூமியின் புகைப்படத்தை இன்னும் 50 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் பல இடங்களில் பச்சைப் பட்டை மறைந்து செந்நிறப்பட்டை தெரியலாம். இப்படியானதொரு சூழல் வராமல் இருக்க உழைக்கும் நமது நண்பர்களுக்கு இந்நேரத்தில் பாராட்டுதலையும் அவர்களது சமீபத்திய அங்கீகாரத்திற்கு

கோடியில் இருவர் - பாராட்டு விழா ,

"பூவுலகு" இதழுக்கு 'சுஜாதா விருது 2010' !

வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்ளலாம்.





Tuesday, February 19, 2008

பட்டொளி வீசி பறக்குது பாரீர்

பட்டொளி வீசி பறக்குது பாரீர் என்று இந்தியாவின் பெருமையை பலரும் பலவிதமாகப் பார்க்க நினைத்தனர். ஆனால் இப்படித்தான் வீசச்செய்வோம் என்று சிலர் முனைப்புடன் இருக்கின்றனர்.

இறப்பு தொடருக்கு இடையில் இப்படி ஒரு தகவல் பதிவு தேவையா? என்று யோசித்தாலும் பேசப்படவேண்டியவை என்பதால் பதிவிடுகிறேன்.

இதோ இந்த ஆண்டிலும் இந்தியாவிலிருந்து ஒரு அறிவியல் கயமைத்தனம். சென்ற ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை, இந்த ஆண்டு ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை.

//A Massive Case Of Fraud
Journal editors are left reeling as publishers move to rid their archives of scientist's falsified research
William G. Schulz
A CHEMIST IN INDIA has been found guilty of plagiarizing and/or falsifying more than 70 research papers published in a wide variety of Western scientific journals between 2004 and 2007, according to documents from his university, copies of which were obtained by C&EN. Some journal editors left reeling by the incident say it is one of the most spectacular and outrageous cases of scientific fraud they have ever seen.//

முழுத்தகவல் இங்கே.

http://www.pubs.acs.org/cen/science/86/8607sci1.html

பல வகையில் ஆராய்ந்து அனுகவேண்டிய ஒரு நிகழ்வு. பொறுத்திருந்து பார்ப்போம், இந்திய அறிவியல் ஆராய்ச்சிகளின் மற்றுமொரு நிகழ்வாய்ப் போகப்போகிறதா இல்லை ஏதாவது ஒரு மாற்றத்தின் துவக்கமாக இருக்குமா என்று.