Mike அவர்களின் ஈழம் குறித்த பதிவிற்கான அழைப்பைத் தொடர்ந்து இப்பதிவு.
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையின் வேர் என்ன?, என்பது குறித்த வரலாற்று உண்மைகள் எதுவாகயிருந்தாலும், அங்கே போராடும் குழுக்களின் போராட்ட வழிமுறைகள் எப்படியாயினும், அங்கே இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதையும் அங்கே தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டியதற்கு அவசியமான சூழலையும் உருவாக்கியது என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பை முனைப்புடன் செய்கிறது என்பது கண்கூடு. தமிழர் என்றில்லாமல், அண்டை தேசத்திலிருக்கும் எந்தவொரு இனமாகயிருந்தாலும், இப்படியானதொரு இன அழித்தொழிப்பு நடைபெற்றால் அதனை இந்தியா எதிர்க்க வேண்டும் என்பதே ஒரு இந்தியப் பிரஜையாக எனது விருப்பமாகயிருக்கும். அப்படியிருக்கையில், அதனை எதிர்க்காவிட்டாலும் அதற்குத் துணைபோகும் இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும், அதற்கான எனது கண்டங்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.நிற்க.
வன்மக்கணக்குகளை இரண்டு பக்கங்களிலும் சரிபார்த்துக் கொண்டுபோகாமல், சமரசமாக இலங்கையில் எல்லோரும் வாழலாம் என்பது போன்ற கருத்துக்கள் பலநூறுமைல்கள் தள்ளியிருக்கும் சில வரையறை சார்ந்த காந்தியவாதிகளுக்கு மட்டுமே சாத்தியம்.
ஈழத்தமிழர்கள் இழந்திருப்பது அதிகம், அதனால் அவர்கள் மனதளவில் சமரசம் அடைய வேண்டுமெனில், தனி ஈழம் அளிப்பதோடல்லாமல், இப்படியான இன அழித்தொழிப்பை மேற்கொண்டதற்காக, முறையாக இலங்கை அரசு (அதற்கு துணை போன இந்திய அரசும்) தமிழ்மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் மன்னிப்புக் கோருவதோடல்லாமல், அவ்வரசு வெட்கிக் குறுகிச் சிறுமைப்படவேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியும். இது சாத்தியப்படுமா... ?? கால மாற்றத்தில் விடையிருக்கலாம்.
ஈழம் என்றில்லை எங்குமே ஒரு இனத்தை அழிக்க முற்படும் எந்தவொரு இனமும் அதற்காக வெட்கித் தலைகுனிந்து, பொதுவில் அதற்கான வருத்தத்தையும், மன்னிப்பையும் கோரினால் மட்டுமே சமரசத்திற்கான தளத்தில் நம்பிக்கை பிறக்கும். இது வரலாறு புகட்டும் உண்மையும் கூட.
ஈழத்தில் அமைதி திரும்பவேண்டும், திரும்பும் என்ற நம்பிக்கையில்..
4Nov2008 அன்று சேர்க்கப்பட்டது:
இதையும் கொஞ்சம் வாசிங்க
வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன் - நாகார்ஜுனன்
இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனையின் வேர் என்ன?, என்பது குறித்த வரலாற்று உண்மைகள் எதுவாகயிருந்தாலும், அங்கே போராடும் குழுக்களின் போராட்ட வழிமுறைகள் எப்படியாயினும், அங்கே இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது என்பதையும் அங்கே தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டியதற்கு அவசியமான சூழலையும் உருவாக்கியது என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை.
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பை முனைப்புடன் செய்கிறது என்பது கண்கூடு. தமிழர் என்றில்லாமல், அண்டை தேசத்திலிருக்கும் எந்தவொரு இனமாகயிருந்தாலும், இப்படியானதொரு இன அழித்தொழிப்பு நடைபெற்றால் அதனை இந்தியா எதிர்க்க வேண்டும் என்பதே ஒரு இந்தியப் பிரஜையாக எனது விருப்பமாகயிருக்கும். அப்படியிருக்கையில், அதனை எதிர்க்காவிட்டாலும் அதற்குத் துணைபோகும் இந்தியாவின் அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும், அதற்கான எனது கண்டங்களையும் இங்கு பதிவு செய்கிறேன்.நிற்க.
வன்மக்கணக்குகளை இரண்டு பக்கங்களிலும் சரிபார்த்துக் கொண்டுபோகாமல், சமரசமாக இலங்கையில் எல்லோரும் வாழலாம் என்பது போன்ற கருத்துக்கள் பலநூறுமைல்கள் தள்ளியிருக்கும் சில வரையறை சார்ந்த காந்தியவாதிகளுக்கு மட்டுமே சாத்தியம்.
ஈழத்தமிழர்கள் இழந்திருப்பது அதிகம், அதனால் அவர்கள் மனதளவில் சமரசம் அடைய வேண்டுமெனில், தனி ஈழம் அளிப்பதோடல்லாமல், இப்படியான இன அழித்தொழிப்பை மேற்கொண்டதற்காக, முறையாக இலங்கை அரசு (அதற்கு துணை போன இந்திய அரசும்) தமிழ்மக்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் மன்னிப்புக் கோருவதோடல்லாமல், அவ்வரசு வெட்கிக் குறுகிச் சிறுமைப்படவேண்டும். இதுவே நிரந்தரத் தீர்வாகவும் இருக்க முடியும். இது சாத்தியப்படுமா... ?? கால மாற்றத்தில் விடையிருக்கலாம்.
ஈழம் என்றில்லை எங்குமே ஒரு இனத்தை அழிக்க முற்படும் எந்தவொரு இனமும் அதற்காக வெட்கித் தலைகுனிந்து, பொதுவில் அதற்கான வருத்தத்தையும், மன்னிப்பையும் கோரினால் மட்டுமே சமரசத்திற்கான தளத்தில் நம்பிக்கை பிறக்கும். இது வரலாறு புகட்டும் உண்மையும் கூட.
ஈழத்தில் அமைதி திரும்பவேண்டும், திரும்பும் என்ற நம்பிக்கையில்..
4Nov2008 அன்று சேர்க்கப்பட்டது:
இதையும் கொஞ்சம் வாசிங்க
வன்னியிலிருந்து வந்த பத்திரிகைக்காரரைச் சந்தித்தேன் - நாகார்ஜுனன்