Thursday, March 4, 2010

இது "வேனில்" காலம்


நமது சக வலைப்பதிவர், நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது, "பேறுகாலத் தனிமை" பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அதாவது மனைவி கருவுற்றிருக்கும் போது, தாய் வீட்டுக்கு அனுப்பிட்டு ஜாலியா இல்லாம அவளோடு இருந்து அவள் அனுபவிக்கும் வலிகளை தாமும் அனுபவிப்பது போன்றுபாவிப்பது என்று குறிப்பிட்டார். இது தமிழகத்தில் சில ஆதிச்சமூகங்களிலே முக்கியமானதொரு சடங்காக இருந்து வந்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார். உடனே (கையிலேயே வைத்திருப்பார்னு நினைக்கிறேன்) ஒரு புத்தகத்தை எடுத்து அதுல என்ன போட்ருக்குன்னு வாசிச்சு காமிச்சார்.

அவர் எப்பவுமே அப்படித்தாங்க, அவருடன் பேசினால், அன்றைக்கு கண்டிப்பாக காத்திரமாக ஏதாவது வாசிச்சோ எழுதியோ தீரணும், இல்லன்னா தூக்கம் வராது. நானும் அவரிடம் பேசும்போதெல்லாம், அதப் பண்றேன் இதப்பண்றேன்னு வாக்குறுதி குடுக்க வேண்டியது அப்புறம் காத்துல பறக்கவிடவேண்டியது, இப்படியே போகுது அவர்கிட்ட என்னோட பில்டப்புகளும்.

இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசினோம்னு தோணுதில்ல, ஆமாம், அப்படித்தான் கேட்டார் என்னப் பாத்து. என்ன பேறுகாலத் தனிமையை அனுபவிக்கிறீங்களான்னு?

அப்படின்னா என்னான்னே தெரியாதுன்னு சொன்னபோது மேலே சொன்னதை விளக்கினார்.

பேறுகாலத் தனிமையை அனுபவித்தேனான்னு தெரியாது, ஆனா, இந்தப் பத்துமாத உடற்கூறியல் வாசிப்பும் அவதானிப்பும், வாழ்க்கையையும் உடலையும் இன்னும் பக்குவமா பாக்க வச்சிடுச்சு. பக்கத்தில இருந்து பாத்ததுக்கே இப்படின்னா, உள்ள அனுபவிச்சவங்களுக்கு எப்படி இருக்கும்? அதனாலதான் பெண்கள் சில விசயங்களில் ரொம்ப பக்குவப்பட்டு இருக்காங்களோன்னு கூட தோணிச்சு.

ஆனாலும், வரும் ஆனா வராது ரேஞ்சுக்கு ஒரு 36 மணிநேரம் காத்திகிட்டிருந்தோம். அப்புறம் பெரிய மனசு பண்ணி தானாவே வெளில வந்துட்டாங்க.

ஆமாங்க, இப்படி ஒரே அழுகையோட வெளிய வந்தாங்க.



தலைய வெளில நீட்டின உடனே சர்ருன்னு எடுத்து இப்படி துக்கிப் பிடிச்சதுதான், சில விநாடிகள் எப்படி ரியாக்ட் பண்ணனும்னே தெரியலை, ஆனா கண் கலங்கிருச்சு, மூளை "off" ஆயிருந்துது. அப்புறம், வந்தவுடன் திறப்பு விழா செய்யுன்னு சொல்லி கத்திரிக்கோலை கைல குடுத்துட்டாங்க, டாக்டருங்க. அப்புறம் ஏதோ ரிப்பன் வெட்றது போல வெட்டி பிரிச்சேன், தாயையும் சேயையும். நான் நினைத்ததைவிட கொடி உறுதியா இருந்தது.. :)

அப்புறம் அன்னிலேருந்து தினம் இப்படித்தான் படத்துல இருக்குற மாதிரி ஒரே சவுண்டு உடுறாங்க.

அப்புறம் மெதுவா அடங்கி அப்பப்போ முழிக்கிறாங்க..



அப்பப்போ சிரிக்கிறாங்க தூக்கத்துலயே.




17 பிப்ரவரிலேருந்து எங்க வீட்டுல "வேனில்" காலம் தொடங்கியாச்சு.. ஆமாங்க அவங்க பேரு "வேனில்".

எப்படி ஃபீல் பண்றேன் என்றார்கள் பலரும்? இன்னும் "off" ஆன அந்த கணத்தையே அசை போட்டுகிட்டிருக்கேன்....

15 comments:

பதி said...

வாழ்த்துக்கள் இரஞ்சித் !!!!

வேனில் இந்த வலைப் பக்கத்தில் வராமல், நமது "பதிவரின்" பக்கத்தில் வருவார் என எதிர்பார்த்தேன் !!!!!

ஜெர்மனியில் சற்று முன்னமே துவங்கிவிட்ட "வேனில்" காலத்தினை கொண்டாடுங்கள் !!!! :-)

கையேடு said...

வாங்க பதி, நன்றி..
நம்ம "பதிவரின்" வேண்டுகோளில்தான் இங்கே வலையேற்றப்பட்டது. பதிவர் இப்போ கொஞ்சம் பிஸி.. :)

மணிநரேன் said...

இங்கு புகைப்படத்துடன் எதிர்பார்க்கவில்லை இரஞ்சித். ஒரு இன்பஅதிர்ச்சி.

உனது உணர்வுகளை மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளாய். விவரித்த சில இடங்களில் எனக்கே உடல் நடுங்குகிறது.”வேனில்”-ன் வரவு உங்கள் இருவரின் வாழ்விலும் ஒரு புதிய புத்துணர்ச்சியையும், அர்த்தத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
வாழ்க்கையை கொண்டாடுங்கள்...)

நேரில் காண்பதற்காக ஆவலாய் காத்திருக்கின்றேன்.
வாழ்த்துக்கள்.

http://thavaru.blogspot.com/ said...

வேனில் வருகையில் சந்தோசித்து....

வால்பையன் said...

வாழ்த்துக்கள் தல!

சந்தனமுல்லை said...

வேனில் - செம க்யூட்! பாப்பாவுக்கும்,பாப்பாவின் பெற்றோருக்கும் எங்கள் அன்பு வாழ்த்துகள்! :-)

வேனில் - புதிதாக வித்தியாசமாக இருக்கிறது - அழைப்பதற்கும் இனிமையாக!

கையேடு said...

நன்றி மணி,
நன்றிங்க ராஜா,

வாங்க வால்பையன், முதல் பின்னூட்டமோ.. நன்றிங்க

நன்றிங்க முல்லை.

Anonymous said...

ரொம்ப சந்தோசம், வாழ்த்துக்கள்.
ராகவாச்சாரி

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வாழ்த்துகள் ரஞ்சித். உண்மையிலேயே, பேறுக் காலத்தில் மனைவியின் அருகில் இருப்பது மிகவும் தேவையான ஒன்று. அதை நீங்களும் அனுபவித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்!!

மு மாலிக் said...

எனது இனிய வாழ்த்துக்கள் ரஞ்சித்.

மாற்றுப்பிரதி said...

nallathu thodarunkal

ஜமாலன் said...

பல அலுவலகத் தொல்லை இடையில் அம்மா உடல்நலமில்லாததால் ஒரு அவசரப் பயணம் இநதியாவிற்கு என... பதிவை இப்பொழுததான் பார்த்தேன்.

“வேனில்“ அருமையாக இந்த கொடும் பாலையிலும் நுழைந்து விட்டான். வாழ்த்துக்கள். அருகில் இருந்து நீங்கள் ஆற்றியுள்ள இந்த செயலை நினைப்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறது. நீங்கள் தைரியசாலித்தான். இதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இங்கு பலருக்கும் பிள்ளை என்பது ஒரு குறுஞ்செய்தியோ அல்லது தொலைபேசிச் செய்தியோதான். பார்க்கப்போகும்போது அந்நியனைப் பார்தததாய் விழிக்கும் சொந்த குழந்தை.

படங்கள் அருமை.

பதிவர்களில் பேறுகாலத் தனிமையை அனுபவித்தவர் நீங்கள்தான் அதற்கும் ஒரு சிறப்பு வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஜமாலன்.

rapp said...

வாழ்த்துக்கள் கையேடு:):):) வேனில், அழகான பெயர். இனி அத்தனையும் அருமையாக அமைய வாழ்த்துக்கள்:):):)

ADW Group said...

Ranjith, congrats...

but, I have become father than you itself...

Once again Congrats to Venil & Family...

I'm searching words...

you always prove that you are my senior....

தமிழ் said...

வாழ்த்துகள்

வேனில்- அழகான பெயர்